கூக்கல்தொரை பகுதிக்கு வந்தவுடன் சிறுமி லயா, பஸ்சிலிருந்து இறங்கினார். அப்போது போனில் பேசிக்கொண்டு, முன்பு வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பஸ்சை டிரைவர் கவனக்குறைவாக இயக்கினார். இதில் பஸ் சிறுமி லயா மீது பஸ் மோதியது. அப்போது தாய் கண்முன்னே லயா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் டிரைவர் சாதாரண நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மட்டுமே வைத்திருந்ததும், பள்ளி பஸ்சில் கிளீனர் மற்றும் பாதுகாப்பு உதவியாளர் இல்லை என்பதும், கவனக்குறைவாக பஸ்சை இயக்கியதால் சிறுமி இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பஸ் டிரைவர் தியாகராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
The post பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.