கடந்த ஆண்டு இதே நேரத்தில் 12 லட்சம் கேஸ்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. இதனால் கடந்த 1ம்தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை ரூ. 1,470 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் ரூ..1,260 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் இன்று மாலை 5 மணி முதல் நவம்பர் 30ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. தேர்தலின்போது அதிக அளவில் மதுபானங்களை சப்ளை செய்வதற்காக முன் கூட்டியே வாங்கி இருப்பு வைத்துள்ளதால் இந்த விற்பனை சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் தேர்தலுக்கு மது இருப்பு வைப்பதை தடுக்க போலீசார் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.117 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் 20 நாளில் ரூ.1,470 கோடிக்கு மது விற்பனை appeared first on Dinakaran.