ஏலம் எடுக்க விரும்புவோர் 01.12.2023 மாலை 5.00 மணி வரை வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வரும் 02.12.2023 அன்று காலை 10.00 மணி முதல் 11:15 மணிக்குள் ஏலம் விடும் இடத்தில் முன் பணமாக ரூபாய். 1000/- செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். முன் பணத்தொகை செலுத்தும் நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முழுவதையும் துறையில் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்) நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்களை ஏலம் விடுவது குறித்த அறிவிப்பு வெளியீடு appeared first on Dinakaran.