சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு ரயில் நாளை முதல் ரத்து: தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்!

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு ரயில் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ம் தேதி வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு ரயில் நாளை முதல் ரத்து: தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: