மது, குட்கா விற்பனை செய்த 24 பேர் கைது

தர்மபுரி, நவ.28: தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், விடுமுறை நாளான நேற்று முன்தினம், மாவட்டத்தில் உள்ள அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குட்கா பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்படி தர்மபுரி உட்கோட்டத்தில் 2 பேர், அரூரில் 7 பேர், பென்னாகரத்தில் 7 பேர், பாலக்கோட்டில் 3 பேர், மதுவிலக்கு பிரிவில் 5பேர் என 24பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மது, குட்கா விற்பனை செய்த 24 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: