பிரதமர் மோடி குறித்து ராகுல் அவதூறாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜ தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், கடந்த 9 ஆண்டுகளில் தொழிலதிபர்களின் 14 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததாக கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. மேலும், பிக்பாக்கெட் அடிப்பவர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது மூத்த தலைவருக்கு தகுதியல்ல என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி குறித்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக நாளை மாலை 6 மணிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
The post மோடி குறித்து விமர்சனம் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: நாளை மாலைக்குள் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.
