ரயில் மெதுவாக கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படத் தொடங்கியது. அப்போது திடீரென ஓடும் ரயிலில் இருந்து சரிபாவும், அவரது மகளும் கீழே விழுந்தனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த பைசல் தனது மகனை அழைத்துக் கொண்டு உடனடியாக ரயிலில் இருந்து இறங்கினார். விசாரித்ததில் சாதாரண டிக்கெட்டுடன் முன்பதிவு பெட்டியில் ஏறியதால் டிக்கெட் பரிசோதகர் தங்களை கீழே தள்ளிவிட்டதாக சரிபா கூறினார். இதுகுறித்து பைசல் கோழிக்கோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார். ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் சரிபாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிக்கெட் பரிசோதரிடம் விசாரணை நடத்த ரயில்வே போலீசார் தீர்மானித்து உள்ளனர்.
The post பெட்டி மாறி ஏறியதால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட தாய், மகள்: டிக்கெட் பரிசோதகர் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.