பராமரிப்பு உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் 27ம் தேதிக்குள் பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள், வரும் 27ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும், என சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, கடந்த ஆண்டு வரை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெற்று வந்து, கடந்த ஏப்ரல் 2023 முதல் தற்போது வரை 10 மாதங்களாக பராமரிப்பு உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் எவரேனும் இருந்தால், வரும் 27ம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை அசல், ஆதார் அட்டை அசல், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை அலுவலகத்தில் நேரில் சமர்பித்து மாதாந்திர உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பராமரிப்பு உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் 27ம் தேதிக்குள் பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: