தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளையில் திமுக வடக்கு, தெற்கு மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதுதான் நமது போராட்டத்திற்கு கிடைக்கும் வெற்றி. இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைவரும் கொள்கை கூட்டமாக மாற வேண்டும். திமுக நடத்தும் நாடகம் என்று எடப்பாடி சொல்கிறார். நாடகத்தை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? நீங்கள் எப்படி முதல்வரானீர்கள்? தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? உங்களுடன் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் காலை வாரி விட்டீர்கள். சசிகலாவின் காலைப்பிடித்து முதல்வராகி, அதன் பிறகு அவருடைய காலையே வாரி விட்டவர்தான் எடப்பாடி. எனவே, எங்களுடைய நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும். மாணவர்கள் உரிமை மற்றும் தமிழ்நாட்டின் உரிமையை திமுக காப்பாற்றும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.
The post நீட் விலக்கு மூலம் மாணவர்கள் உரிமையை திமுக காப்பாற்றும் இந்தியாவை காப்பாற்ற பாஜவை வீழ்த்த வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.