சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பாஜ பங்கேற்கும்: நயினார் நாகேந்திரன் பேட்டி


நெல்லை: நாளை (18ம் தேதி) நடக்கும் சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் பாஜ பங்கேற்கும் என பாஜ சட்டமன்றக் குழு தலைவரும், நெல்லை தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நாளை கூட்டப்பட்டுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் பாஜ கலந்து கொள்ளும். இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரும் தீர்மானத்தை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பாஜ தீர்மானிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பாஜ பங்கேற்கும்: நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: