கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர்கள் 56 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இணை பேராசிரியர்கள் 56 பேரை பணி நீக்கம் செய்து அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போலியான கல்விச் சான்றிதழ் வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.