இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி எஸ்எஸ்ஐ மனோகரன், ஏட்டு ரகுநாதன் ஆகியோர் சேர்ந்து ஆதரவற்று இறந்த உடல்களை தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சென்று உரிமைகோராமல் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தனர். இதில் 10 இறந்தவர்களின் உடல்கள் உரிமை கோராமல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த 10 பேரின் சடலங்களை போலீசார் தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்ய உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், உரிய சான்றிதழ்களில் போலீசாரிடம் கையெழுத்து பெற்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு செல்ல அனுமதித்தனர். இதையடுத்து போலீசார் 10 பேரின் சடலங்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தனர்.
The post உரிமைகோராத 10 சடலங்களை அடக்கம் செய்த போலீஸ் appeared first on Dinakaran.