காஞ்சிபுரம் மாவட்டம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகை கவுதமி ஆஜர்

காஞ்சிபுரம்: நடிகையும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான கவுதமி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக தற்போது ஆஜராகியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தமக்கு சொந்தமான 46 ஏக்கர் நிலம் சம்பந்தமான மோசடி புகாரில் அழகப்பன் மற்றும் அவரது மனைவி உள்பட 6 பேர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை கவுதமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இது சம்பந்தமாக 30 நிமிடங்களுக்கு மேலாக நடிகை கவுதமியிடம் காவல்துறையினர் விசாரணை நடைத்தினர்.

The post காஞ்சிபுரம் மாவட்டம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகை கவுதமி ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: