நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ‘பிரசவ வலிதான் ஏற்பட்டுள்ளது, குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன, எனவே உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுங்கள்’ என தெரிவித்துள்ளனர். இதை அவரது குடும்பத்தினர் கேட்காமல் வீட்டிற்கு சென்று விட்டார்களாம். சில மணி நேரங்களில் ஹேமலதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து, ேஹமலதா மற்றும் குழந்தையை மீட்டு குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஹேமலதாவிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ஹேமலதா பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே பிரசவம்; பெண் பரிதாப சாவு appeared first on Dinakaran.