மாநிலங்களவை தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆம்ஆத்மி எம்பிக்கு உத்தரவு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது, டெல்லி அரசு சட்டம் (திருத்தம்) 2023-ஐ பரிசீலனை செய்வதற்கான தெரிவுக் குழுவில் 5 மாநிலங்களவை எம்பி.க்களின் பெயர்களை அவர்களைக் கேட்காமல் சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ராகவ் சதா, மாநிலங்களவைத் தலைவரை நேரில் சந்தித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

The post மாநிலங்களவை தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆம்ஆத்மி எம்பிக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: