வேலூர்: வேலூர் அருகே மணல் திருட்டை தடுக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உமாபதிக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பொன்னை அணைக்கட்டு ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய நபர்களை உமாபதி வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுத்த உமாபதியை மணல் அள்ளிய முனிசாமி, குமரேசன் மற்றும் 2மகன்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.