ஒரு ஆடு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரையில் விற்பனையானது. விலை அதிகமாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர். இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் மினி டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் உளுந்தூர்பேட்டை- சேலம் ரோட்டில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதுதவிர ஆட்டுச்சந்தை காரணமாக அப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளிலும் விற்பனை களைகட்டியது. அடுத்தவாரம் புதன்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.
