திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி – வெங்கல் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள கேமரா கோபுரம் சரிந்து விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார். காற்றின் வேகம் காரணமாக வனத்துறைக்கு சொந்தமான கேமரா கோபுரம் சரிந்து விழுந்ததில் மாணவர் பலியாகினார். கேமரா கோபுரம் சரிந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் தினேஷ்குமார் (20) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.