ஒன்றிய அரசோ அந்த எல்லைகளை எல்லாம் கடந்து கடன் வாங்குகிறது. பொய்யான தகவல்களை சொல்லி வரும் அண்ணாமலையின் கருத்துகளை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள். கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசை சந்திக்க பயப்படுகிறார் என்று அண்ணாமலை குறை சொல்கிறார். மாநில அரசை சந்திக்க அவர் பயப்படுகிறார் என்றால், தமிழக செயலாளரையோ, காவல்துறையையோ சந்தித்து அவரது குறைகளை சொல்லலாம். ஆனால் அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு பாஜ அலுவலகத்தையே நம்பி இருக்கிறார். எனவே கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் இருந்து வெளியேற வேண்டியவர் அல்ல. வெளியேற்றப்பட வேண்டியவர்களில் ஒருவர். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜ அலுவலகத்தை நம்பி இருக்கும் ஆளுநர் ரவி தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்: கே.எஸ்.அழகிரி ஆவேசம் appeared first on Dinakaran.