பெரம்பலூரில் பட்டாசு கடைகள் ஆய்வு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் உரிமம் ரத்து அரியலூரில் குறைதீர் நாள் கூட்டம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட 437 மனுக்கள் மீது நடவடிக்கை

அரியலூர்:அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீர் நாள் கூட்டத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட 437 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 437 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

The post பெரம்பலூரில் பட்டாசு கடைகள் ஆய்வு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் உரிமம் ரத்து அரியலூரில் குறைதீர் நாள் கூட்டம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட 437 மனுக்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: