புழல் சுற்று வட்டார பகுதிகளில் சாலையில் குளம் போல தேங்கிய மழை நீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புழல்: புழல் சுற்று வட்டார பகுதிகளில், மழை நீர் தேங்கியது. புழல், காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர், கதிர்வேடு, லட்சுமிபுரம், புத்தகரம், சூரப்பட்டு, செங்குன்றம், வடகரை, பாடியநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக புழல் அம்பத்தூர் சாலை சந்திப்பு, புழல் – செங்குன்றம் பைபாஸ் சாலை மற்றும் சர்வீஸ் சாலை செங்குன்றம் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி ஆங்காங்கே குளம் போல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழை நீரை உடனுக்குடன் அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புழல் சுற்று வட்டார பகுதிகளில் சாலையில் குளம் போல தேங்கிய மழை நீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: