குறிப்பாக ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் போனஸ் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தாலும் இந்த ஆண்டு அதை அத்தனையையும் நீக்கி மனநிறைவு ஏற்படும் வகையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20% போனஸ் அறிவித்த முதல்வருக்கு தொ.மு.ச. பேரவையின் இணைப்புச் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் சில விடுபட்ட துறைகள் இருந்தால் அவற்றுக்கும் விரைவில் அறிவிப்பு வரும் என்ற உறுதியை அளித்துள்ளதற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அதன்படி, 20% போனஸை பெற்றிருப்பதற்கு உதவிகரமாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் முதல்வருக்கு தொமுச பேரவை நன்றி appeared first on Dinakaran.