சந்திரகிரஹணம்: நாளை மறுதினம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்சி: சந்திரகிரஹணத்தையொட்டி நாளை மறுதினம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற 28.10.2023 சனிக்கிழமை அன்று சந்திர கிரஹணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் மாலை 5.30 மணிக்குபிறகு அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் இல்லை என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

மறுநாள் 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்படும் என்ற விபரத்திணையும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி வெளியிட்டு தங்களின் மேலான ஒத்துழப்பினை நல்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சந்திரகிரஹணம்: நாளை மறுதினம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: