இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹிகாரி பேசுகையில், “நாங்கள் தொடர்ந்து காசா நகரில் தாக்குதல் நடத்துவோம். இன்று காசா நகரில் பயங்கரவாதிகள் தங்கியுள்ள கட்டிடங்களின் கட்டமைப்பை தங்கினோம். நிலத்திற்க்கு கீழே பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை தாக்கி அழித்தோம்.எங்களுடைய நோக்கம் நிறைவேறும் வரை தொடர்ந்து தாக்குதலை நடத்துவோம்,’என்றார். இதனிடையே அக் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக அமெரிக்க கண்டனம் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இதனை தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா, சீனா முறியடித்தது. அதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வலியுறுத்தி ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.
The post போர் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டிய ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் : இஸ்ரேல் பிடிவாதம் appeared first on Dinakaran.