இந்நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு கவர்னர் மாளிகை எதிரே சாலையின் நடைபாதையில் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென கவர்னருக்கு எதிராக கோஷமிட்டபடி 2 பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றார். இதைப் பார்த்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது கையில் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். அந்தக் குண்டுகள் சாலையின் நடுவில் உள்ள பேரிகார்டுகளில் பட்டு உடைந்து கீழே விழுந்தது. பின்னர். மேலும் 2 குண்டுகளை எடுத்து கவர்னர் மாளிகை நோக்கி வீச முயன்றார். இதனால் உஷாரான போலீசார், வெடிகுண்டு வீச முயன்றவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த இரு பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கேயே அழிக்கப்பட்டன.
பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் நந்தனத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்று தெரிந்தது. பிரபல சி வகை ரவுடியான வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே ரவுடி கருக்கா வினோத் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் மீது வெடிப்பொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் நள்ளிரவில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று (26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
The post ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசிய ரவுடி கருக்காவிற்கு நவ.9ம் தேதி வரை காவல்.. 5 பிரிவுகளில் வழக்கு!! appeared first on Dinakaran.
