பெண்களிடம் செயின் பறிப்பு புதுச்சேரி முதியவர் கைது

 

சிதம்பரம், அக். 23: மூதாட்டி மற்றும் பெண்ணிடம் செயின் பறித்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அருகே பத்மாவதி (68) என்ற மூதாட்டி வேலவன் நகரில் நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தலைமறைவானார். அதே நாளில் லால்புரம் பெரியார் நகர் அழகர் (63) என்பவர் பெட்டி கடையில் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிதம்பரம் அருகே விஐபி நகரில் ரேவதி என்ற பெண் நடந்து சென்றபோது, அவரிடமிருந்து மர்ம நபர் 3 பவுன் செயினை பறித்து சென்றுள்ளார்.

இது குறித்த புகார்களின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிதம்பரம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட புதுச்சேரி மண்ணாடிபட்டு செம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் ராஜசேகரன் (58) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

The post பெண்களிடம் செயின் பறிப்பு புதுச்சேரி முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: