அவருக்கு கோயில் அறங்காவலர் குழு சார்பில், பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் வாடகை பணத்தை முறையாக செலுத்த முன்வரவில்லை. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் கோயிலுக்கு சொந்தமான கடையை தனது உறவினருக்கு பக்ருதீன் விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.தகவலறிந்து கோயில் அறங்காவலர் குழுவினர் நேற்று முன்தினம் காலை பக்ருதீனின் கடைக்கு சீல் வைத்தனர். உடனே அந்த சீலை அவர் அகற்றியதாக கூறப்படுகிறது. மாலை போலீஸ் பாதுகாப்புடன் பக்ருதீனின் கடைக்கு மீண்டும் சீல் வைத்தனர்.
The post வாடகை செலுத்தாத கடைக்கு சீல்: கோயில் அறங்காவலர் குழு அதிரடி appeared first on Dinakaran.