வெள்ளக்கோவில் வரதராஜபெருமாள் கோயிலில் பூமி பூஜை, கால்கோள் விழா

 

காங்கயம், அக்.20:திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வரதராஜபெருமாள் கோயிலில் பூமி பூஜை மற்றும் கால்கோள் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.

இதில் கோயில் திருப்பணி குழு தலைவரும் முன்னாள் வெள்ளகோவில் பேரூராட்சி தலைவருமான செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ராசிமுத்துக்குமார், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி முருகானந்தன் உட்பட மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post வெள்ளக்கோவில் வரதராஜபெருமாள் கோயிலில் பூமி பூஜை, கால்கோள் விழா appeared first on Dinakaran.

Related Stories: