இந்நிலையில், ஜான் பீட்டரை தாக்கிய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் 25ம் தேதி சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன் கிறிஸ்தவ முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் மாநில தலைவர் சரவணன், சென்னிமலை முருகன் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்து முன்னணி ஈரோடு மாவட்ட செயலாளர் முரளி புகாரின்பேரில், செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநில தலைவரான சரவணன் (36), திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பாதிரியார் ஸ்டீபன் (40) ஆகிய இருவர் மீதும் மதத்தை அவமதித்தல், மத கலவரத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
The post முருகன் கோயில் குறித்து அவதூறு கிறிஸ்தவ முன்னணி மாநில தலைவர் கைது appeared first on Dinakaran.