இது நாளை(20ம்தேதி) மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும். மேலும், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து குமரிக் கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்த நிலை 24ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேற்கண்ட நிகழ்வுகளின் மூலம் தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
The post அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தம் வடகிழக்கு பருவமழைக்கான சூழல் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.