பள்ளிகளில் இன்று குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழி

சென்னை: தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிகளில் இன்று வழிபாட்டுக் கூட்டத்தின்போது, ‘குழந்தை திருமணங்கள் இல்லா’ உறுதிமொழியை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உறுதி மொழியின்போது, எனது பகுதியிலோ சமூகத்திலோ குழந்தை திருமணம் நடப்பதாக தெரியவந்தால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

எனது சுற்றுப் புறத்தில், சமூகத்தில் எந்தவொரு குழந்தைக்கும் திருமணம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வேன். எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன். குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்விக்காகவும் செயல்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன் என கூறி மாணவர்கள் படிவங்களில் கையெழுத்திட வேண்டும்.

The post பள்ளிகளில் இன்று குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழி appeared first on Dinakaran.

Related Stories: