இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், வணிகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளன. திருவாவூர் மாவட்டத்தில் 30,000த்திற்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 4,000த்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.கடை அடைப்பு போராட்டத்தால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம், பேரணி நடத்த உள்ளதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர்.இந்த போராட்டம் காரணமாக நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
The post கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்… 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு!! appeared first on Dinakaran.