பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உணவு உதவி தொகை அதிகரிப்பு: காங்கிரஸ் எஸ்.சி.துறை வரவேற்பு

சென்னை: பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உணவு உதவி தொகையை அதிகரித்துள்ள முதல்வருக்கு காங்கிரஸ் எஸ்.சி.துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாதந்தோறும் கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.1,100, பள்ளி மாணவருக்கு தலா ரூ.1000 வீதம் உணவு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை வைத்து தான், மாணவருக்கான உணவுப் பொருட்களை விடுதி காப்பாளர்கள் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அரசுப் பள்ளி விடுதி மாணவருக்கான உணவு உதவித் தொகை ரூ.1000லிருந்து ரூ.1400 ஆகவும், அரசு கல்லூரி விடுதி மாணவருக்கான உணவு உதவி தொகை ரூ.1100லிருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே, ஆதி திராவிட மாணவர்களின் விடுதி தொகையை உயர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உணவு உதவி தொகை அதிகரிப்பு: காங்கிரஸ் எஸ்.சி.துறை வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: