மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகளை வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த படகு இல்லத்தில் ரூ.5 கோடியில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக மிதவை உணவக கப்பல் அமைக்கப்படுகிறது. மிதக்கும் உணவகம் அமைக்கும் பணியில் முக்கியமான படகு அமைக்கும் பணியின் கட்டுமானம் முழுமையடைந்து முதல் தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மிதக்கும் உணவகம் அமைக்கும் பணி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரும் வகையில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ரூ.5 கோடியில் பிரமாண்டமாக தயாராகும் மிதக்கும் உணவக கப்பலின் பயணம் விரைவில் தொடங்கும்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.