இதனிடையே வால்பாறையை அடுத்த செங்குத்து பாறை தேயிலை தோட்டத்தில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென கரடி புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை கண்டதும் தொழிலாளர்கள் தப்ப முயன்றபோது 2 வடமாநில பெண் தொழிலாளர்களை கரடி தாக்கியது. இதில் தலை மற்றும் காலில் படுகாயம் அடைந்த பெண்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
The post வால்பாறை தேயிலை தோட்டத்தில் திடீரென கரடி புகுந்ததால் பரபரப்பு: கரடி தாக்கியதில் தொழிலாளர்கள் காயம் appeared first on Dinakaran.