தேச தந்தை காந்தி பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: காந்தியடிகளின் 155வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: அரையாடை அணிந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராளி. வெறுப்புணர்வுக்கு எதிராக ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர். அவரது வாழ்வின் பொருளை உணர்த்தவே, இந்த நாட்டிற்கே ‘காந்தி தேசம்’ என பெயரிட வேண்டும் என பெரியார் வலியுறுத்தினார். அண்ணல் என்றும், மகாத்மா என்றும் இந்த நாடும் பாரும் போற்றும் நமது தேசத் தந்தை காந்தியாரின் பிறந்தநாளில், அவர் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது இலட்சிய பாதையில் வெறுப்புணர்வை ஒழித்து, எல்லார்க்கும் எல்லாம் என்ற இந்தியாவை கட்டமைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தேச தந்தை காந்தி பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: