செப்டம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 84.37 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 84.37 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயிலில் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பேர் பயணம் செய்துள்ளனர். அதேபோல், ஜூன் மாதத்தில் 74 லட்சம் பேர் பயணம் செய்தனர். இது மேலும் அதிகரித்து ஜூலை மாதத்தில் 82 லட்சத்து 53 ஆயிரத்து 692 பேர் பயணம் செய்தனர். ஆகஸ்ட் மாதத்தில் 85 லட்சத்து 89 ஆயிரத்து 977 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பேர் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் மட்டும் கியூ ஆர் கோடு பயன்படுத்தி 32 லட்சத்து 54 ஆயிரத்து 175 பேர் பயணச்சீட்டுகளை பெற்றுள்ளனர். பயண அட்டைகளை பயன்படுத்தி 43 லட்சத்து 63 ஆயிரத்து 739 பேர் பயணம் செய்துள்ளனர். டோக்கன்களை பயன்படுத்தி 2 லட்சத்து 68 ஆயிரத்து 579 பேர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வாட்ஸ்அப் டிக்கெட், கியூ ஆர் கோடு போன்ற பல வகையான டிக்கெட்டுகளுக்கு 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ் அப் டிக்கெட் மூலமாகவோ அல்லது பேடிஎம் ஆப் மூலமாகவோ பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

The post செப்டம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 84.37 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: