மேலும் அந்த மூதாட்டியை அப்படியே படுத்திருக்கும்படி அப்பகுதியில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். இதைபார்த்த கேட் கீப்பர் உடனடியாக ரயிலை இயக்குபவர்களை தொடர்பு கொண்டு ரயிலின் அடியில் மூதாட்டி சிக்கி இருப்பதை தெரிவித்தார். இதனால் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மூதாட்டி மீட்கப்பட்டார். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரயிலுக்கு அடியில் மூதாட்டி சிக்கி இருப்பதும், ரயில் சென்றபோது அந்த மூதாட்டியை அப்படியே படுத்திருக்கும்படி அங்கிருந்தவர்கள் கூறுவதும், ரயில் நின்றதும் மூதாட்டி மீட்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி: மணப்பாறையில் பரபரப்பு appeared first on Dinakaran.