அந்த வகையில், சென்னை முழுவதும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 24ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான 7 நாட்களில் பதிவான வாகனங்கள் திருடப்பட்ட வழக்குகளில், 2 வழக்குகளில் தொடர்புடைய 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1 இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பான 7 வழக்குகளில் தொடர்புடைய, 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூ.2,450 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், சென்னை முழுவதும் கடந்த 7 நாட்களில் திருட்டு மற்றும் வழிப்பறில் ஈடுபட்டதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post கடந்த 7 நாட்களில் சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட 15 பேர் கைது appeared first on Dinakaran.