சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து 12 மணியளவில் பெசன்ட்நகர் மின்மயானத்தில் 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமி அவரது உடலுக்கு மாலை அணிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.
The post பெசன்ட்நகர் மின்மயானத்தில் 30 குண்டு முழங்க காவல் துறை மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் appeared first on Dinakaran.