குடும்ப தலைவியாக இருந்தாலும், குடும்ப தலைவருடன் சில கருத்து வேறுபாடு இருந்தால், ஓரளவுக்குத்தான் தாங்க முடியும். முதலாளியாக இருந்தாலும் தொழிலாளியால் ஓரளவுக்குத்தான் இறங்கிச்செல்ல முடியும். அதற்கு மேல் தாங்க முடியாது. பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என்று சொன்னதற்கான காரணம் தெரியுமா? வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது மோடி மீண்டும் பிரதமராக அதிமுக ஆதரவளிக்க வேண்டுமாம். 2026ல் வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க ஆதரவு அளிக்க வேண்டுமாம்.
இப்படி கூறும் பாஜவுடன் மீண்டும் கூட்டணி வைக்க முடியாது. பூத்தில் உட்காரக்கூட ஆட்கள் இல்லாத பாஜவுக்கு, 2.5 கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுக ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும். இதனால், பாஜவுடன் கூட்டணி துண்டிக்கப்பட்டது. பாஜ கூட்டணி வேண்டாம் என்பதற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால், தொழில் நஷ்டம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு கருப்பணன் பேசினார்.
The post பூத்தில் உட்காரக்கூட பாஜவுக்கு ஆள் இல்லை அண்ணாமலையை முதல்வராக்க டார்ச்சரால் கூட்டணி துண்டிப்பு: மாஜி அதிமுக அமைச்சர் பகீர் தகவல் appeared first on Dinakaran.