2022ம் ஆண்டை போல இந்த முறை விலை உயர்வு அதிகமாக இருக்காது. பிராண்டுகள் மற்றும் அளவைப் பொறுத்து ரூ. 5 முதல் 50 வரை விலைஉயர்வு இருக்கும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் மற்றும் வோட்கா ஆகிய குறைந்த விலை பிராண்டுகளின் விலையானது குவாட்டர் பாட்டிலுக்கு (180 மில்லி) ரூ.5 ஆகவும், ஆஃப் பாட்டிலுக்கு (375 மிலி) ரூ.10 ஆகவும், மேலும் 750 மில்லி முழு பாட்டிலுக்கு ரூ.20வரை உயர்த்தப்படலாம். மேலும் பீர் விலையும் ஒரு பாட்டிலுக்கு குறைந்தது ரூ.10 வரை அதிகரிக்கப்படும்.
நடுத்தர மற்றும் உயர் ரக பிராண்டுகளுக்கு ரூ.10 முதல் ரூ.80 வரை விலைஉயர்வு இருக்கும். உத்தேச கட்டணங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். இதுகுறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். அப்போது என்னென்ன சரக்கு எவ்வளவு விலை என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்போம். 2022-2023ம் ஆண்டில், மதுபான விற்பனை மூலம் மொத்த வருவாய் ரூ.44,098.56 கோடியாக இருந்தது. இந்த உயர்வின் மூலம் மேலும் ரூ.500 முதல் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும். இருப்பினும், பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து இன்னும் சில நூறு மதுபானக் கடைகளை மூட அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post டாஸ்மாக் கடைகளில் மது விலையை உயர்த்த திட்டம் appeared first on Dinakaran.
