சென்னை: மீனவர்களின் நலன் காக்க ரூ.1 கோடி சுழல் நிதி உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 2016 முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் தர ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடிக்கச் சென்று காணாமல் போனவர்கள் மற்றும் இயற்கை சிற்றங்களால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு உதவ சுழல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
The post மீனவர்களின் நலன் காக்க ரூ.1 கோடி சுழல் நிதி உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.