மதுரை: கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காத 3 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கடலூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவிட்டும் இழப்பீடு தராத கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆட்சியர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்.9ம் தேதிக்கு ஒத்திவைத்தது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் இழப்பீடு தரக் கோரி தஞ்சை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் 2019-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
The post கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காத 3 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு! appeared first on Dinakaran.
