அதேபோல் 2017ல் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 65 பேர் மரணம் அடைந்தனர். தற்போது தீவிர நடவடிக்கைகள் எடுத்ததால் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனவரி 1 முதல் நேற்று வரை 4 ஆயிரத்து 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 390 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் இறந்துள்ளனர். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த உயிரிழப்பு ஏற்படாத வகையில் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது’’ என்றார்.
The post தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.