அப்போது கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து கால்வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் ரித்தீஷ் அடித்துச் செல்லப்பட்டான். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடியும் ரித்தீஷ் கிடைக்கவில்லை. மேலும் இரவு ஆனதால் தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர். இதனையடுத்து கிராம மக்கள், நீர்வரத்து கால்வாய் நீரினை அடைத்து கால்வாய் வரண்டதும், இரவு 1 மணியளவில் சேற்றில் சிக்சியிருந்த ரித்தீஷை சடலமாக மீட்டனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செய்யாற்றில் குளித்தபோது சேற்றில் சிக்கி மாணவன் பலி appeared first on Dinakaran.