உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனை ஒட்டி மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்கள் இரண்டாவது சீசன் காலம் ஆகும். இந்த ஆண்டிற்கான இரண்டாவது சீசன் தற்போது தொடங்கி இருப்பதால் உதகை தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக அலங்கார மேடைகளில் சால்வியா, மேரிகூல், பிகோட்டியா உள்ளிட்ட 40 வகையான பூக்கள் நிரம்பிய 21 ஆயிரம் மலர்த்தொட்டிகள் காட்சிக்கு வைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. சந்திரயான் 3 நிலவில் தரை இறங்கியதை கொண்டாடும் வகையில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளை கொண்டு அதன் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலர் மாடங்களில் 40 வகையான மலர் செடிகள் கொண்ட 21,000 மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை முதல் மலர் அலங்கார கண்காட்சியை சுற்றுலா பயணிகள் காண அனுமதிக்கப்படுவார்கள். நாளை தொடங்க உள்ள மலர் கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைக்க உள்ளார்.
The post உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கான மலர் அலங்கார கண்காட்சி நாளை தொடக்கம் appeared first on Dinakaran.