இலங்கையில் இருந்து அதி நவீன இழுவை கப்பல் வரவழைத்தும் முடியாததால் 300 மீட்டர் தூரம் கடலில் மணல் மற்றும் கற்கள் கொட்டப்பட்டு சாலை அமைக்கும் பணி கடந்த 10 நாட்களாக இரவு பகலாக நடந்தது. இப்பணி நேற்று முடிந்ததும் ஜெனரேட்டர்கள் மீட்பு பணியில் இந்திய கடற்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று மதியம் 2 நீராவி ஜெனரேட்டர்களையும் பெரிய ஹைட்ராலிக் கிரேன்கள் கொண்ட டிரெய்லர் மூலம் மீட்டனர். 19 நாள்களுக்குப்பின் 2 நீராவி ஜெனரேட்டர்களும் எந்தவித சேதாரமும் இன்றி மீட்கப்பட்டதாக அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் சிக்கிய மிதவையிலிருந்து நீராவி ஜெனரேட்டர்கள் மீட்பு appeared first on Dinakaran.