கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சரவணன் ஓசூர் அடுத்த பாகலூர் காவல் நிலையத்திற்கும், போச்சம்பள்ளி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபாவதி கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், அதேபோல் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த கிரிஜா ராணி, போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கும், பணியிடமாற்றம் செய்து சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: