அக்டோபர் 27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

சென்னை: அக்டோபர் 27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு டிசம்பர் 12வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 26 வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2024 ஜனவரி 5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

The post அக்டோபர் 27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ appeared first on Dinakaran.

Related Stories: